கல்வி முறைமையில் மாற்றப்படக்கூடிய சீர்த்திருத்தங்கள் பற்றி கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்வி முறைமையில் மாற்றப்படக்கூடிய சீர்த்திருத்தங்கள் பற்றி கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர்!

வருடக்கணக்கில் பாட அறிவை மனப்பாடம் செய்து பரீட்சைக்கு முகம் கொடுக்க வேண்டிய மன அழுத்தத்தில் இருந்து பிள்ளைகளை விடுவிப்பதற்காக கடுமையாக உழைத்து வருவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி சீர்திருத்தங்களுக்கு அப்பாற்பட்ட கல்வி மாற்றத்தின் ஊடாக தற்போதுள்ள பரீட்சை மையக் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

வருடாந்த தேசிய கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்பள்ளியில் இருந்து பாடசாலை வகுப்பறை ஊடாக இந்த மாற்றமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் முன்பள்ளியில் சுற்றுச்சூழலை ஆர்வமுடன் அவதானிக்க அதிக இடவசதி உள்ளதால் அதிகளவான குழந்தைகள் கேள்விகள் கேட்டு ஆய்வு ரீதியான சுயாதீனமான கல்வியில் ஈடுபட வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறான ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியில் ஈடுபடுவதன் மூலம் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய அறிவை இணைத்து சமூகத்திற்கு பயனுள்ள படைப்புகளை உருவாக்க முடியும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.