ரஷ்யாவின் கொடுப்பனவு அட்டை செயல்முறையை இடைநிறுத்திய இலங்கை மத்திய வங்கி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரஷ்யாவின் கொடுப்பனவு அட்டை செயல்முறையை இடைநிறுத்திய இலங்கை மத்திய வங்கி!

இலங்கையின் மத்திய வங்கி ரஷ்யாவின் தேசிய அட்டை கொடுப்பனவு முறைமை (NSPK) வழங்கிய MIR அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் செயல்முறையை இடைநிறுத்தியுள்ளது.

“இலங்கை வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட MIR கொடுப்பனவு முறையின் மீதான அமெரிக்காவின் தடைகள் காரணமாக, மத்திய வங்கியானது தற்போதைய நிலையில், MIR அட்டை திட்டத்தை செயற்படுத்துவதற்கான கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்கும் நிலையில் இல்லை" என  மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க பணம் செலுத்தும் நிறுவனங்களான விசா இன்க் (Visa) மற்றும் மாஸ்டர்கார்டு இன்க் (MasterCard) ஆகியவை ரஷ்யாவில் செயல்பாடுகளை இடைநிறுத்திய பின்னர், ரஷ்யாவில் வழங்கப்பட்ட அமெரிக்க அட்டைகள்( Visa, MasterCard) வெளிநாட்டில் வேலை செய்வதை நிறுத்திய பிறகு, இந்த ஆண்டு ரஷ்யர்களுக்கான MIR கார்டுகளின் முக்கியத்துவம் கணிசமாக உயர்ந்தது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.