நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான குழுவினருக்கு எதிரான மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான குழுவினருக்கு எதிரான மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முன்னாள் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் உட்பட 39 பேருக்கு எதிராக தாக்கல் செய்த இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஸ்மன் மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோர் இங்கு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முறையான மதிப்பீட்டின்றி பொறுப்பற்ற பொருளாதார முடிவுகளை எடுத்து நாட்டையும் மக்களையும் திவாலாக்குவதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன, நீச்சல் சம்பியன் ஜூலியன் போலின் உள்ளிட்டோர் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.