இலங்கையை விடுவிக்க காத்திருக்கும் சர்வதேச நாணய நிதியம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையை விடுவிக்க காத்திருக்கும் சர்வதேச நாணய நிதியம்!

இலங்கையை கடனிலிருந்து விடுவிப்பதற்குரிய மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னர், தம்முடைய அனைத்து கொள்கைகளுக்கும் பொருந்தக் கூடிய ஏற்பாடுகளை, இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் வரையில் தாம் காத்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான சிரேஷ்ட்ட செயற்பாட்டு அதிகாரி மசாஹிரோ நொசாக்கி இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 2.9 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கான பணியாளர் மட்ட உடன்பாட்டை சர்வதேச நாணய நிதியம் பூர்த்தி செய்தது.

இந்த உடன்பாடு 48 மாதங்களுக்கான செலுத்துகையை கொண்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக்குழுவிற்கு பொருந்தக் கூடிய கொள்கைகளை இலங்கை பூர்த்தி செய்யுமானால், அடுத்த கட்ட நடவடிக்கையை சர்வதேச நாணய நிதியம் மேற்கொள்ளும்.

குறிப்பாக ஏற்கனவே தமது நாட்டுக்கு கடன் கொடுத்தவர்களுடன் மறுசீரமைப்பு ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கின்றது.

இந்த நிபந்தனை நிறைவேற்றப்படுமானால், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கையின்படி, தற்போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள பணியாளர் உடன்பாடு நிர்வாகக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு, நிர்வாகக் குழு இலங்கைக்கு நிதியுதவிகளை செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட செயற்பாட்டு அதிகாரி மசாஹிரோ நொசாக்கி தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.