ஆட்பதிவு திணைக்களத்தின் சேவை கட்டணங்கள் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவை கட்டணங்கள் அதிகரிப்பு!


ஆட்பதிவு திணைக்களத்தின் சில பணிகளுக்கான சேவை கட்டணங்கள் நாளை (01) முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளன.


தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் அமைச்சரவை அனுமதியுடன் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளது.


இதற்கமைய, முதல் தடவையாக தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க 200 ரூபவாகவும், காலாவதியான தேசிய அடையாள அட்டையை புதுப்பிக்க விண்ணப்பிப்பதற்கு 200 ரூபவாகவும், தொலைந்துபோன தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பதற்கு 1,000 ரூபவாகவும், தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிப்பதற்கு 500 ரூபவாகவும் கட்டணங்கள் அறவிடப்படும்.


அதேநேரம், ஒரு நாள் சேவையினூடாக தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள (விண்ணப்ப கட்டணமின்றி) 2,000 ரூபவாகவும், தேசிய அடையாள அட்டையை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்துக்கொள்ள 2,000 ரூபவாகவும், புகைப்பட நிலையங்களில் பதிவு செய்வதற்கு 1,500 ரூபவாகவும், புகைப்படத்தினை பதிவு செய்யும் பணியை புதுப்பித்தல் (இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை) 3,000 ரூபவாகவும் கட்டணங்கள் அறவிடப்படும்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.