![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxdzbPji-sliulyx_foawnSmxyhjjslA-NLvJX8Yi3xk2KCjCYMVWJRhnMIymm2bzX_6AEz6cKdZv8i3ghnAPiK2B2EvfwiNQmye4pFXH4tx-9E2Zlhdd8gdyFN_LAZqbwklBnYHkrkSOj5scGWeKWqmzr4zFHZpHcO6UtIFfCQTF1b7t1gVbl9XAU6w/s16000/62069DE8-3EAC-44BF-868B-13C1265606CC.jpeg)
காலி மாவட்டத்தின் பத்தேகம பிரதேச செயலகப் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, கிரியெல்ல, அஹெலியகொட, அலபாத, இரத்தினபுரி, பெல்மதுல்ல, நிவித்திகல, குருவிட்ட மற்றும் கல்வான ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்த நுவர, புலத்சிங்கள, வல்லவிட்ட, இங்கிரிய, தொடங்கொட, அகலவத்தை, மத்துகம மற்றும் பண்டாரகம ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)