பழைய மாணவர்களினால் புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் இலவசமாக வழங்கி வைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பழைய மாணவர்களினால் புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் இலவசமாக வழங்கி வைப்பு!


கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் கற்கும் இம்முறை புலமைப்பரிசில் எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதிரி வினாத் தாள்கள் இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (31) பாடசாலையின் ஆரம்ப பிரிவு பகுதிதலைவர் ஏ.சீ.எம் நளிம் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது. 


இந் நிகழ்வில் பாடசலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி (LLB), பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் எஸ்.எல் ஹமீட், ஆகியோரினால் பகுதித் தலைவரிடம் மாதிரி வினாத்தாள்கள் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் யூ.கே லாபீர், எம்.முஸ்த்கீம் உட்பட ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

-சர்ஜுன் லாபீர்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.