சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தில் வாகனங்கள் வாங்கிய 20 வயது இளைஞர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தில் வாகனங்கள் வாங்கிய 20 வயது இளைஞர் கைது!


சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு வாகனங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் 65 இலட்சம் ரூபா மதிப்புள்ள கார் மற்றும் 2.5 கோடி ரூபா பெறுமதியான ஜீப் என்பவற்றை கொள்வனவு செய்துள்ளார்.


பொரலஸ்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இவர், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


சட்டவிரோதமான முறையில் தனது தந்தை சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தியே குறித்த இளைஞர் வாகனங்களை கொள்வனவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த இளைஞன் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.