முன்னாள் பிரபல ICC கிரிக்கட் நடுவர் அசாத் ரவூப் காலமானார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் பிரபல ICC கிரிக்கட் நடுவர் அசாத் ரவூப் காலமானார்!

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் நடுவரும், பாகிஸ்தானின் முன்னாள் முதல் தர வீரருமான அசாத் ரவூப் தனது 66 வது வயதில் மாரடைப்பால் இன்று வியாழக்கிழமை காலமானார்.

ரவூஃப் தனது சிறந்த நடுவர் வாழ்க்கையில் 170 சர்வதேச போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். 170 சர்வதேச போட்டிகளில் 49 டெஸ்ட், 98 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகள் அடங்கும்.

2006 முதல் 2013 வரை ஐசிசி எலைட் அம்பயர் பேனல் உறுப்பினராகவும் இருந்தார்.

பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் கம்ரான் அக்மல் ட்விட்டரில் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

 "முன்னாள் ஐசிசி நடுவர் அசாத் ரவுஃப் மறைந்த செய்தி அறிந்து வருத்தமாக உள்ளது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார். 

கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டுகள் ரவூப்பின் வாழ்க்கையை களங்கப்படுத்தியது, பிப்ரவரி 2016 இல், ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு ஐந்தாண்டு இடைநீக்கம் விதிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.