திரிபோஷவில் நஞ்சு ஏதும் இல்லை! பாராளுமன்றில் ஆவேசமடைந்த சுகாதார அமைச்சர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திரிபோஷவில் நஞ்சு ஏதும் இல்லை! பாராளுமன்றில் ஆவேசமடைந்த சுகாதார அமைச்சர்!!


புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு விநியோகிக்கப்படும் திரிபோஷவில் அஃப்ளாடோக்சின் என்ற புற்றுநோயை உருவாக்கும் இரசாயனம் காணப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுத்துள்ளார்.


உள்ளூர் நாளிதழ் ஒன்றில் வெளியான குற்றச்சாட்டுகள் தொடர்பான செய்தியை மேற்கோள்காட்டி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, இன்று (21) பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பினார், அமைச்சருக்கு திரிபோஷ விநியோகிப்பதற்கு என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது தெரியுமா என்றார்.


கேள்விகளுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, திரிபோஷவில் அஃப்ளாடோக்சின் இரசாயனம் இல்லை என்றும், அந்தச் செய்தி அப்பட்டமான பொய் என்றும் தெரிவித்தார்.


இவ்வாறான ஆதாரமற்ற அறிக்கையை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு தனது அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.