![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyDAxEyFhHuJQiBK-VbAT4mQjRfc5NZ9sqAy1WTAyCARQn1_wa_-Am-zciZ7DWerIXCEZVfLiEg9-zKdk3fqEL8lTM6nTORysIUdE1uKoI_Ef8kJHG38tJf1GcRSZJ8Zinj_7eYEaZA7Y_IEmRoKTFI0M9EQBRzuxKhe-flzvpXFYvH9u5XmUrASM-/s16000/MG_9833-copy.webp)
நாட்டில் சர்வதேச வர்த்தகத்தை கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகத்தை நிறுவ இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களுக்கான பணிகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு மேலும் பல வாய்ப்புகள் உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டியதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.