இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்!!


இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.


வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாக “மனுசவி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் திங்கட்கிழமை (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நீண்டகால அபிலாஷையை நிறைவேற்றும் வகையில் ‘மனுசவி’ ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.


வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுபவர்களின் ஓய்வூதிய வாழ்க்கையை வலுப்படுத்தும் வகையில் “மனுசவி” சமூக பாதுகாப்பு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


எதிர்காலத்தில் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தொழிலாளியின் உயிரையும் பாதுகாக்கும் வகையில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை விரைவில் தொடங்கவுள்ளதாக அமைச்சர் உறுதியளித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.