கொழும்பு தாமரை கோபுரத்தின் ஒரு நாள் வருமானம் இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு தாமரை கோபுரத்தின் ஒரு நாள் வருமானம் இது தான்!

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் சில பகுதிகள் நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டதன் மூலம் 1 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். முதல் நாளில் ரூ. 1.5 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

கொழும்பு தாமரை கோபுரத்தை திறந்து வைக்கும் நாளில் 2612 உள்ளூர் மக்களும் 21 வெளிநாட்டு பிரஜைகளும் வருகை தந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேற்று திறக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரம் வார நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையும், வார இறுதி நாட்களில் மதியம் 12.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரையும் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.