தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிடுவதற்கான நேரத்தில் திருத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிடுவதற்கான நேரத்தில் திருத்தம்!

கொழும்பு தாமரை கோபுரம் கடந்த 15 ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

இதன்மூலம், முதல் 3 நாட்களில் 75 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலப்பகுதியில் சுமார் 14,000 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக கொழும்பு, தாமரைக் கோபுரம் தனியார் நிறுவனத்தின்பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிடுவதற்கான நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை (20) முதல் வார நாட்களில் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிட முடியும்.

அவ்வாறே, வார இறுதி நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.