![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJJ7IjTUhdVdfarASA2LVnR1Bf3Gkw56ifKYxc1rEOc0bR8IPQFfjSdScbqvoNRWxAF1vqWvGLUTTmWOqKrbSrf__3oLXDWVQaTc-9kHOpH7j1Cr-3Id-eHqtHgUTRggdRqT_w-7KjidvJ8IkhFQqcqWhwNsa11xsu3bldMbISmOoDgzKnBlpwe6I1/s16000/namal.jpg)
இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத்தை வென்றதன் பின்னணியில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷவின் இரண்டரை வருட கால சேவைக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டை அரசியலுக்கு அப்பாற்பட்டு முன்னணிக்கு கொண்டு வந்ததில் திரு.நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கு பெரும் பங்குண்டு என்றும் அவர் கூறினார்.
எனவே நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது மிகவும் பொருத்தமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)