தொலைபேசி சேவை கட்டண அதிகரிப்பு இன்று முதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொலைபேசி சேவை கட்டண அதிகரிப்பு இன்று முதல்!

தொலைபேசி சேவை கட்டணங்கள் 20% அதிகரிப்பு இன்று (05) முதல் அமுலுக்கு வரும்.

முன்னர் இருந்த அட்டைகளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் முந்தைய ரூ.49 கார்ட் புதிய கட்டண திருத்தத்தின்படி ரூ.59 ஆகவும், ரூ.99 கார்டின் விலை ரூ.119 ஆகவும் இருக்கும்.

இதற்கு முன்பு போல் ரூ. 49 மற்றும் ரூ. 99 ரீலோட் செய்தால், வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தரவுகள் மற்றும் பொதிகள் (டேட்டா பெக்கேஜ்) இயங்காது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.