தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வழங்க தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை வழங்க தீர்மானம்!

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா, தலவாக்கலை, பதுளை ஆகிய பிரதேசங்களில் பெருந்தோட்ட தொழிற்சங்கங்களினால் பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தொழிற்சங்க போராட்டத்தை நேற்று (23) முதல் முடிவுக்கு கொண்டுவர தோட்ட தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட நாளாந்தம் ஆயிரம் ரூபா சம்பளத்தை பெருந்தோட்ட கம்பனி இரண்டு வருடங்களாக வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் அனைத்து தோட்டங்களிலும் பல நாட்களாக தோட்ட தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.

பெருந்தோட்ட கம்பனியின் தேயிலை தோட்டங்களில் நாளாந்தம் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூளை கொழும்பு தேயிலை ஏலத்திற்கு அனுப்புவதில் தடை ஏற்பட்டதன் காரணமாக தோட்ட தொழிற்சங்க உயர் கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதன் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையின் பிரகாரம், பெருந்தோட்டக் கம்பனியானது தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் அரசாங்கத்தினால் ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அந்த நிலுவைத் தொகையுடன் நாளாந்த சம்பளத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததையடுத்து, தோட்டத் தொழிற்சங்கங்கள் நிறுவனத்தின் தேயிலைத் தோட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தன.

தேயிலை கொழுந்து பறிக்க முடியாமல் செல் தோட்டத் தொழிலாளர்ள் ஒரு கிலோ தேயிலை கொழுந்திற்கு ரூ.  40-50 வரை தோட்ட நிறுவனம் இரண்டு வருடங்களாக அறவீடு செய்து வந்தது.

கடந்த 23ஆம் திகதி மஸ்கெலியாவில் தொழிற்சங்க நடவடிக்கையைக் கைவிடும் கலந்துரையாடலில் கலந்துகொண்ட மலையக சேர்ந்த பலம் வாய்ந்த தொழிற்சங்கத்தினர் மற்றும் மலையகய்தில் உள்ள மற்றுமொரு பலமான தொழிற்சங்கத்தினர் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சூடான சூழ்நிலையை கட்டுப்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.  (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.