முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை தொடர்பில் இரு சந்தேக நபர்கள் விடுவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை தொடர்பில் இரு சந்தேக நபர்கள் விடுவிப்பு!

2008 ஆம் ஆண்டு வெலிவேரியவில் வெடிகுண்டு வெடித்து திரு.ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு சந்தேக நபர்களை விடுதலை செய்து கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி திரு.சஹான் மாபா பண்டார இன்று (01) உத்தரவிட்டார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் மற்றும் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் செனரத் லக்ஷ்மன் குரே ஆகிய இரு சந்தேக நபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 6, 2008 அன்று, முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 16 பேரைக் கொலை செய்தமை மற்றும் வெலிவேரிய மைதானத்திற்கு அருகில் தற்கொலை குண்டுதாரி மூலம் 84 பேரைக் கொல்ல சதி செய்ததாக 31 குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.