ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் விபரம் வெளியானது!


ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (26) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்.


ஜப்பானுக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ​​ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் ஜனாதிபதி, இந்த சுற்றுப்பயணத்தின் போது ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். .


அதன் பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸ் செல்ல உள்ளார்.


பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது ஜனாதிபதி விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்போங் மார்கோஸ் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளார்.


ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.


ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொழும்புகே, ஊடக பணிப்பாளர் ஷனுக்க கருணாரத்ன, நிலையான அபிவிருத்தி பணிப்பாளர் ரந்துல அபேவீர மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோர் ஜனாதிபதியுடன் பயணம் செய்யவுள்ளனர்.


திறைசேரி செயலாளர் பிலிப்பைன்ஸ் விஜயத்தில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்வார் ஆனால் தினுக் கொழும்பகே மற்றும் ரந்துல அபேவீர ஆகியோர் ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் அவர்களுடன் இணைந்து கொள்ள மாட்டார்கள். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.