இணைந்து செயற்பட்டால் பொருளாதார மற்றும் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்! -நஸீர் அஹமட்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இணைந்து செயற்பட்டால் பொருளாதார மற்றும் இனப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்! -நஸீர் அஹமட்


அனைவரும் இணைந்து செயற்பட்டால் உருவாக்கப்படவுள்ள தேசிய சபை மூலம் பொருளாதார பிரச்சினை உள்ளிட்ட இதர பிரச்சினைகளோடு இனப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என அமைச்சர் நஸீர் அஹமட், தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் இன்று (20) பிரதமரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தேசிய சபை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது. இத்தகைய நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய சபை ஒன்றை அமைப்பதற்கான பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்னர் பல சபைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் இதுபோன்ற ஒரு சபை இதுவரை அமைக்கப்படவில்லை. இந்த சபை மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொள்ள முடியும். ஒரு சட்ட வாக்கமாக இதனை செயற்படுத்தி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இதனை பயன்படுத்த முடியும்.


அத்துடன் நாடாளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பேசப்படும் போதும் பிரதான பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படாமலேயே உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் உருவாக்கப்படவுள்ள தேசிய சபை மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அதனால் அனைவரும் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.


எனவே, காலத்தை வீணடிக்காமல் உருவாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.