ரதன தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் விவகாரம் நீதிமன்றில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரதன தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் விவகாரம் நீதிமன்றில்!


நாடீளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், தனக்கு கட்சியின் தலைவர் சமன் பெரேரா உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமைவான வழக்கில், நீதிவான் முன்னிலையில் இரகசிய வாக்கு மூலம் ஒன்றை வழங்க அபே ஜன பல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா தயாராகி வருகின்றார்.


இது தொடர்பில் இன்று (20) கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய முன்னிலையில் சமன் பெரேரா, குற்றவியல் சட்டத்தின் 127 ஆம் அத்தியாயத்தின் கீழ் இரகசிய வாக்கு மூலம் வழங்க, தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை முன்வைத்தார்.


எனினும் சமன் பெரேரா குறித்த விவகாரத்தில் பொலிஸாரால் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளாரா என உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிராத நிலையில் அவர் முன்வைத்த கோரிக்கையை நீதிவான் நிராகரித்தார்.


எனினும் சமன் பெரேரா குறித்த விவகாரத்தில் சந்தேக நபரா என்பதை உறுதி செய்ய, விசாரணையாளர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக  நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய அறிவித்தல் பிறப்பித்ததுடன் அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராக சமன் பெரேராவுக்கும் அறிவித்தல் விடுத்தார்.


-எம்.எப்.எம்.பஸீர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.