அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!


அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களுக்கான நீர் கட்டண நிலுவையை இரண்டு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.


அவ்வாறு கட்டணத்தை செலுத்த தவறுபவர்களுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்குமாறு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு சபாநாயகர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


நீர்கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விபரப் பட்டியலையும் தமக்கு வழங்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தியதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.


4,400 மில்லியன் ரூபா நீர் கட்டண நிலுவை நாடளாவிய ரீதியாக உள்ள மக்களிடம் இருந்து அறவிட வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் இருந்து 10 மில்லியன் ரூபா நீர் கட்டண நிலுவை செலுத்தப்பட வேண்டியுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.