போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும்!


கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாரதூரமான முறையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்கள். மாளிகாவத்தை, கொலன்னாவ மற்றும் வனாத்தமுல்ல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை பாரதூரமான முறையில் அதிகரித்துள்ளன.


போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க விசேட சட்டம் இயற்றப்பட வேண்டும் என எதிர்தரப்பின் சுயாதீன உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.


சபாநாயகர் தலைமையில் இன்று (07) புதன்கிழமை இடம்பெற்ற  நாடாளுமன்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கணடவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில்,


பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நகர் மற்றும் கிராம புறங்களில் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ளன.


விசேடமாக கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை பாரதூரமான தன்மையில் அதிகரித்துள்ளன.


ஹெரோயின் போதைப்பொருள் பாவனையை காட்டிலும் தற்போது ஐஸ் போதைப்பொருள் பாவனை சமூக மட்டத்தில் தீவிரமடைந்துள்ளது.


பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஐஸ் போதைபொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பாரதூரமானது. ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் குறுகிய காலத்தில் சுகாதார ரீதியில் பாதிக்கப்பட்டுவார்கள்.


போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் சமூக பாதுகாப்புக்கும், சாதரண மக்களின் அன்றாட வாழ்வெக்கும் அச்சமூட்டும் நிலையில் உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.