பசில் ராஜபக்ஷ அமெரிக்க பயணம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பசில் ராஜபக்ஷ அமெரிக்க பயணம்?


முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (09) காலை அமெரிக்கா பயணமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு, 2023 ஜனவரி 15ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் அண்மையில் அனுமதியளித்திருந்தது.


வைத்திய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளல் உட்பட தனிப்பட்ட காரணங்களால், அமெரிக்காவுக்கு செல்ல எதிர்பார்த்துள்ளமையால் அதற்காக அனுமதி வழங்குமாறு பசில் ராஜபக்ஷ சார்பில் உயர்நீதிமன்றில் முன்னிலையாகிருந்த சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.


இதனைப் பரிசீலனைக்கு எடுத்த பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐவர்கொண்ட நீதியரசர்கள் ஆயம், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.