இரு நாட்களுக்கு மின்துண்டிப்பு இல்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரு நாட்களுக்கு மின்துண்டிப்பு இல்லை!


நாட்டில் எதிர்வரும் இரு தினங்களில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை (12) நாடளாவிய ரீதியில் ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ள மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணிவரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.


அத்துடன், கொழும்பு முன்னுரிமை வலையங்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.