எமக்கு தினசரி கிடைக்கும் 720 மில்லி லீட்டர் பெற்றோல் போதுமானதல்ல - முச்சக்கர வண்டி உரிமையாளர்கள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எமக்கு தினசரி கிடைக்கும் 720 மில்லி லீட்டர் பெற்றோல் போதுமானதல்ல - முச்சக்கர வண்டி உரிமையாளர்கள்

முச்சக்கர வண்டிகளுக்கு QR திட்டத்தின் கீழ் வாரமொன்றுக்கு வழங்கப்படும் 05 லீற்றர் பெற்றோல் போதாது எனவும், இந்த நிலைமைகளினால் தாம் வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு வாரத்தில் தங்களின் முச்சக்கர வண்டிகளுக்கு 05 லீற்றர் பெற்றோல் கிடைப்பதாகவும், அந்த அளவு பெற்றோல் தமக்கு வாடகைக்கு பயணிப்பதற்கு போதாது எனவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமைகள் காரணமாக முச்சக்கரவண்டிக்கான மாதாந்த கட்டணங்களை உரிய முறையில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமைகள் காரணமாக உணவுப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமது முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 05 லீற்றர் பெற்றோல் வழங்குவதன் மூலம் நாளொன்றுக்கு 720 மில்லிலிற்றர் பெற்றோல் மாத்திரமே தமக்கு கிடைப்பதாகவும், வாடகைக்கு பயணிப்பதற்கு இந்த பெற்றோல் போதாது என்பதனால் உரிய அதிகாரிகள் அதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். அவர்களின் முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு குறைந்தது 10 லிட்டர் பெட்ரோல் அவசியம் என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.