![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEjAbGUYJ-tdqajfWvayVFzJhY8Oyj4MWqSEF0i4ce83hdahtmeslM8ezE62HATh3g6PUJcpibqCgRX_cA5M9fJpq8nIXI0oldEJMkxfxzQyt82fW_R4tZeil2uEpghcILHXSVRpAy9sW_9yuNvP0vRxOUFf7trj9HKax55FbMujGdpAaeBBHvcLLQtg/s16000/1BBA8888-6DC7-43AB-A7AE-C1512A188F4C.jpeg)
ஹட்டன் நகரில் நேற்று (27) ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை ஆற்றிய திரு.பாசிர் மொஹமட் மேலும் கூறியதாவது,
நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமன்றி நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் சிறிய அளவிலான பேக்கரிகளை நடத்தி வந்தவர்களில் பெரும்பாலானோர் தமது தொழிலை இழந்துள்ளனர்.
பேக்கரி தொழிலில் ஏராளமானோர் வேலை பார்த்தனர்.வேலையும் பறிபோயுள்ளது. பாண், பேக்கரி பொருட்களின் விலை உயர்வால், அதனை கொள்வனவு செய்ய மக்களிடம் பணம் இல்லை.
தற்போதைய நிலவரப்படி பாண் ஒன்றின் விலை ரூ. 500 வரை உயரும். ஏழைகளின் உணவாக இருந்த பாண், தற்போது ஆடம்பர வாழ்க்கை நடத்துபவர்களின் உணவாக மாறியுள்ளது.
பல ஆண்டுகளாக பேக்கரி தொழில் செய்து வருகிறேன். தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் பேக்கரியை மூட முடிவு செய்துள்ளேன்.
என் பேக்கரியில் வேலை செய்தவர்களுக்கு என்ன நடக்கும்? தீர்வு இல்லையா? அவர் மேலும் கேள்வி எழுப்பினார். (யாழ் நியூஸ்)