15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம்; 19 தொடக்கம் 27 வயதுக்கு உட்பட்ட ஐவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம்; 19 தொடக்கம் 27 வயதுக்கு உட்பட்ட ஐவர் கைது!

பாதுக்க - பின்னவல பகுதியில் 15 வயதுச் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் குறித்த சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பாதுக்க பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்ட 5 இளைஞர்களை பாதுக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுமி இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவருடைய அழைப்பின் பேரில் பாதுக்க வால்கெலே பகுதிக்கு சிறுமி சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த இளைஞனுடன் ஏனைய நால்வரும் இணைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி அவிசாவளை வைத்தியசாலையில் சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.