முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஓர் நற்செய்தி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஓர் நற்செய்தி!!


முச்சக்கரவண்டிகளை முழுநேர தொழிலாக வைத்திருப்பவர்களை இனங்கண்டு அவர்களுக்கான எரிபொருளை விடுவிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பெற்றோலிய அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் இன்று (08) காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கலந்துரையாடலின் பின்னர் அமைச்சருடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மூன்று வாரங்களுக்குள் தொழில்முறை முச்சக்கரவண்டி சாரதிகளை இனங்கண்டு அவர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அனுமதி வழங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, மேல் மாகாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தொழில்முறை முச்சக்கர வண்டி சாரதிகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், அரச மற்றும் தனியார் பஸ்களின் தேவைகளை கண்டறியும் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று காலை போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது.

சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் போக்குவரத்து ஆணைக்குழு ஒவ்வொரு பிரிவினருக்கான தேவைகளை இனங்கண்டு எரிசக்தி அமைச்சுக்கு எரிபொருள் அளவுகளை பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது.

அந்தத் தேவைகளைப் பெற்ற பின்னர் அடுத்த வாரத்திற்குள் ஒரு தனி QR குறியீட்டில் கூடுதல் எரிபொருள் ஒதுக்கீட்டை அமைச்சகம் ஒதுக்கும் என்று எரிசக்தி அமைச்சர் கூறினார்.

அதுவரை தனியார் பேருந்துகளுக்குத் தேவையான கூடுதல் எரிபொருளை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 107 இ.போ.ச டிப்போக்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

எமது வாட்ஸாப் குழுமத்தில் இணைந்துகொள்ள https://chat.whatsapp.com/D72lD9wd4kN6FldOsdv6DA

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.