
நீண்ட கால சிறைத்தண்டனை அனுபவித்து, நல்ல செயல்களைச் செய்து, சமூகத்திற்குப் பங்களிக்கக் கூடியவர் என்பதன் அடிப்படையில் ஜனாதிபதியின் மன்னிப்பு நியாயமானது என அரசாங்கம் நம்புவதாக நீதி அமைச்சர் திரு.விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் இரண்டு மூன்று தினங்களுக்குள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதோடு, எதிர்வரும் வாரத்தில் அவரை விடுதலை செய்வதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கையொப்பமிட உள்ளார்.
எதிர்வரும் வாரத்தின் முதல் சில தினங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)