ஆர்ப்பாட்டக்காரர்களால் எரியூட்டப்பட்ட ஜனாதிபதியின் வாகனத்தின் பெறுமதி வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆர்ப்பாட்டக்காரர்களால் எரியூட்டப்பட்ட ஜனாதிபதியின் வாகனத்தின் பெறுமதி வெளியானது!

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி திரு.ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் ஏற்பட்ட சேதம் சுமார் 205 மில்லியன் ரூபா என சட்டமா அதிபர் கொழும்பு கோட்டை நீதவானிடம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பிரதமராக இருந்த போது அவர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ காருக்கு சுமார் நூற்று 19 கோடி ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்கள் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.