வாங்குவதற்கு ஆட்கள் இருப்பதால் தான் முச்சக்கர வண்டி சாரதிகள் பெட்ரோல் விற்பனை செய்கிறார்கள்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாங்குவதற்கு ஆட்கள் இருப்பதால் தான் முச்சக்கர வண்டி சாரதிகள் பெட்ரோல் விற்பனை செய்கிறார்கள்!!


முச்சக்கர வண்டி சாரதிகள் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு ஆட்கள் இருப்பதால் அதனை விற்பனை செய்வதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மட்டுமன்றி, பெட்ரோலிய கூட்டுத்தாபன முதலாளிகளும் பொலிஸாரும் எரிபொருளைத் திருடி விற்பதாக அதன் தலைவர் லலித் தர்மசேகர சுட்டிக்காட்டுகிறார். 

முச்சக்கர வண்டி சாரதிகளை குற்றவாளிகளாக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

வாரந்தோறும் ஐந்து லீற்றர் எரிபொருள் தமது தொழிலுக்குப் போதாது என்றும் சமூக ஊடகங்களில் கபடவாதிகள் போதும் என கூறுவதாகவும் அவர் கூறினார். 

இணைய சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.