![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtSj-tipvvHHxteyepiueVFrVICDzaAPq0D0jhagYmfDOQ-kvJ8DrGKAgjcyRC5pYtAzNO96-_-PUoApNxmjVVDfZlzp2fqIehNjUzpjjJLgnGouP6zlMYJHJVmCNSIKr2-0XWvd13YhQ/s16000/1659463029745927-0.png)
கடந்த ஜூலை 9-ம் திகதி இந்த நபர் ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சமன்புரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர்.
இன்று பிற்பகல் தெரணியகல பிரதேசத்தில் வைத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)