ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபர் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபர் கைது!!


ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கடந்த ஜூலை 9-ம் திகதி இந்த நபர் ஜனாதிபதி மாளிகைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஜனாதிபதி நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சமன்புரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர். 

இன்று பிற்பகல் தெரணியகல பிரதேசத்தில் வைத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.