இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!


குறிப்பாக இரவு நேரங்களில் தனி நபர் வாகனங்களை கண்காணிக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக் கொண்டனர். 

அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் உரிமத் தகடுகளைத் திருடிச் செல்வதாக இலங்கை பொலிஸார் இன்று அம்பலப்படுத்தியுள்ளனர். 

காலி, காலி துறைமுகம், திஸ்ஸமஹாராமய, அஹுங்கல்ல மற்றும் கதிர்காமம் ஆகிய பொலிஸ் அதிகார எல்லைகளில் மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடு திருடப்படுவது தொடர்பில் பல முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளிகளை கைது செய்வதற்காக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, சந்தேகநபர்கள் வந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகள் போலியானவை எனவும் அவை மோட்டார் சைக்கிள்களில் இருந்து திருடப்பட்டது எனவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.