சகோதரர் ஒருவரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சகோதரர் ஒருவரால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர்!!

நொரோச்சோலை பகுதியில் உள்ள கரம்ப பாலத்திற்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காயமடைந்த நபர் மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

காணி தொடர்பான தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த நபர் இவ்வாறு சுடப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்ற அவரது சகோதரரே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நொரோச்சோலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.