பிறப்புச் சான்றிதழிலுக்கு புதிய நடைமுறை அமுலாகிறது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிறப்புச் சான்றிதழிலுக்கு புதிய நடைமுறை அமுலாகிறது!


புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் உள்ளடக்கிய பிறப்பு சான்றிதழை வழங்கும் செயற்பாடுகளை ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பதிவாளர் திணைக்களம் என்பன இணைந்து இன்று (01) திங்கட்கிழமை முதல் ஆரம்பித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

2021 டிசம்பர் 14 ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பதிவாளர் திணைக்களம் என்பன ஒன்றிணைந்து இலங்கை பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பதிவாளர் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ், ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளடக்கிய பிறப்பு சான்றிதழை வழங்கும் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அவை இணையவழியூடாக மேற்குறிப்பிடப்பட்ட இரு திணைக்களங்களுக்கிடையிலும் தகவல்கள் பரிமாற்றப்பட்டு வழங்கப்படவுள்ளன.

ஆரம்பக் கட்டமாக இதன் முன்னோடி வேலைத்திட்டத்தை கம்பஹா, தெஹிவளை, ஹங்குராங்கெத்த, குருணாகல், இரத்தினபுரி மற்றும் தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்களில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பிறப்பு சான்றிதழைப் பெற்றுக் கொண்ட சகல பிரஜைகளும் 15 வயது பூர்த்தியாவதற்கு முன்னரே தேசிய அடையாள அட்டை எண்ணைப் பெற்றுக் கொள்வதற்காக ஆட்பதிவு திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் கொண்டு தமக்காக தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

எம்.மனோசித்ரா

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.