கல்முனை விளையாட்டு கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட பாதணிகள் வழங்கி வைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கல்முனை விளையாட்டு கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட பாதணிகள் வழங்கி வைப்பு!

கல்முனை, மத்தியமுகாம் சவளக்கடை பிரதேசத்தில் உள்ள அமீர் அலி விளையாட்டுக் கழகம் மற்றும் சவளக்கடை றூல் பிரக்கஸ் உதைபந்தாட்ட அக்கடமிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உதைப்பந்தாட்ட காலணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(15) நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி நவாஸ் தலைமையில் இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள இராஜங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாதணிகளை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ ரஜாப்தீன்,எம்.டி ரிபாஸ்,பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் நெளபர் ஏ பாவா உட்பட பலரும் கலந்து கொண்டனர். (சர்ஜுன் லாபீர்)
(யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.