பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையே பலகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இருநாடுகளுக்கிடையில் அவ்வப்போது வான்வழி தாக்குதல்களும் நடைபெறும். இந்த நிலையில் இஸ்ரேல் திடீரென, பாலாஸ்தீனம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு மீது நேற்று நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மூத்த தளபதி, 5 வயது சிறுமி உட்பட 10 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவத்தில் 5 வயது சிறுமியும் உயிரிழந்திருப்பது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் தாத்தா, தனது பேத்தியின் மரணம் குறித்து கண்ணீர் ததும்பக் கேள்வியெழுப்பியிருக்கிறார். மிடில் ஈஸ்ட் ஐ செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட வீடியோவில், அச்சிறுமியை அடக்கம் செய்ய அவளை ஒரு வெள்ளைத்துணியில் சுற்றியிருந்தனர். அப்போது அந்த சிறுமியின் தாத்தா, “அவள் நர்சரிக்கு செல்ல வேண்டுமென்று கனவு கண்டாள். அவளுக்கு ஒரு பை மற்றும் துணி வேண்டும். இந்த அப்பாவிப் சிறுமி என்ன செய்தாள்? அவள் என்ன ராக்கெட்டுகளின் பொறுப்பாளராக இருந்தாளா? அல்லது சண்டையிட்டாளா?” என கண்ணீருடன் கேட்டார். ட்விட்டரில் வெளியான இந்த வீடியோ பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல், `போராளிகளை குறிவைத்து தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது' என தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் தாத்தா, தனது பேத்தியின் மரணம் குறித்து கண்ணீர் ததும்பக் கேள்வியெழுப்பியிருக்கிறார். மிடில் ஈஸ்ட் ஐ செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட வீடியோவில், அச்சிறுமியை அடக்கம் செய்ய அவளை ஒரு வெள்ளைத்துணியில் சுற்றியிருந்தனர். அப்போது அந்த சிறுமியின் தாத்தா, “அவள் நர்சரிக்கு செல்ல வேண்டுமென்று கனவு கண்டாள். அவளுக்கு ஒரு பை மற்றும் துணி வேண்டும். இந்த அப்பாவிப் சிறுமி என்ன செய்தாள்? அவள் என்ன ராக்கெட்டுகளின் பொறுப்பாளராக இருந்தாளா? அல்லது சண்டையிட்டாளா?” என கண்ணீருடன் கேட்டார். ட்விட்டரில் வெளியான இந்த வீடியோ பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும் இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல், `போராளிகளை குறிவைத்து தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது' என தெரிவித்திருக்கிறது.