
நிகழ்வொன்றில் உரையாற்றிய சுற்றுலா அமைச்சர், எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் சுற்றுலா பயணிகளிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசேட எரிபொருள் அனுமதிச் சீட்டு வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்தவுடன் விமான நிலையத்தில் எரிபொருள் அனுமதிச் சீட்டுக்களை கொள்வனவு செய்வதை அறிமுகப்படுத்துவதை நாங்கள் நோக்குகிறோம். டொலரில் கட்டணம் செலுத்தப்பட வேண்டும், அதே நேரத்தில் எரிபொருள் பாஸ் டாப்-அப் (Top Up) முறையின் கீழ் இயக்கப்படும்” என்று அவர் விளக்கினார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் மேலும் கூறுகையில், இந்த சுற்றுலா எரிபொருள் பாஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் ஒரு பம்ப் ஒதுக்கப்படும்.