சர்வகட்சி அரசாங்கத்திற்கு பொன்சேகா எதிர்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வகட்சி அரசாங்கத்திற்கு பொன்சேகா எதிர்ப்பு!

சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவது பயனுள்ள விடயம் அல்ல என ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள பிரச்சினைக்கு சர்வகட்சி அரசாங்கத்தை தீர்வாக பார்க்கவில்லை என திரு.பொன்சேகா தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களின் பிரதான கோரிக்கையாக ஊழலை ஒழிப்பதாக தெரிவித்த திரு.பொன்சேகா, அதில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும், ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது நாடும் மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள் காணப்பட வேண்டியது அவசியமானது எனவும் திரு.பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.