சஜித் இனை விட்டுவிட்டு அரசாங்கத்தினுள் நுழையும் சிரேஷ்ட உறுப்பினர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஜித் இனை விட்டுவிட்டு அரசாங்கத்தினுள் நுழையும் சிரேஷ்ட உறுப்பினர்கள்!

சர்வ கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியினுள் கருத்து வேறுபாடுகள் வலுப்பெற்றுள்ளன.

நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில், கூட்டாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்கட்சியில் உள்ள பெருந்தொகையானோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இத்தருணத்தில் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முயற்சிக்க வேண்டும், இல்லையேல் தமது அரசியல் மக்களால் நிராகரிக்கப்படும் எனவும் கட்சியின் முக்கிய பதவிகளை வகிக்கும் சிரேஷ்ட குழுவும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதில்லை என கட்சி தீர்மானித்தால் அவர்கள் தனிப்பட்ட மட்டத்தில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.