அரசாங்கம் நிர்ணயித்த விலை வரம்புகளுக்கு உட்பட்டு முட்டைகளை விற்பனை செய்யாத அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
முட்டைகளை அதிக விலைக்கு விற்றால் குறைந்த பட்ச அபராதம் 1 இலட்சம் ரூபாவும் அதிகபட்ச அபராதம் 5 இலட்சம் ரூபாவும் என மேற்படி அதிகார சபையின் தலைவர் திரு.சாந்த நிரியெல்ல தெரிவித்தார்.
ஒரு நிறுவனத்திற்கு குறைந்தபட்ச அபராதம் 5 லட்சம் ரூபாயும் அதிகபட்ச அபராதமாக 50 லட்சம் ரூபாயும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச விலை 43 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்து அரசாங்கம் தற்போது வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
முட்டைகளை அதிக விலைக்கு விற்றால் குறைந்த பட்ச அபராதம் 1 இலட்சம் ரூபாவும் அதிகபட்ச அபராதம் 5 இலட்சம் ரூபாவும் என மேற்படி அதிகார சபையின் தலைவர் திரு.சாந்த நிரியெல்ல தெரிவித்தார்.
ஒரு நிறுவனத்திற்கு குறைந்தபட்ச அபராதம் 5 லட்சம் ரூபாயும் அதிகபட்ச அபராதமாக 50 லட்சம் ரூபாயும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச விலை 43 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்து அரசாங்கம் தற்போது வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)