பங்களாதேஷில் சுதந்திரத்துக்குப் பிறகு வரலாறு காணாத அளவு எரிபொருள் விலை உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பங்களாதேஷில் சுதந்திரத்துக்குப் பிறகு வரலாறு காணாத அளவு எரிபொருள் விலை உயர்வு!


பங்களாதேஷில் எரிபொருளின் விலை இதுவரை இல்லாத அளவு 52 வீதம் உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து, பெட்ரோல் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

நள்ளிரவிலிருந்து (05) பெட்ரோல் விலை 51.7 வீதமும் டீசல் விலை 42.5 வீதமும் உயர்த்தப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து விலையேற்றத்திற்கு முன்பே எரிபொருளை நிரப்பிக்கொள்ளப் பலர் பெட்ரோல் நிலையங்களுக்கு விரைந்தனர். 

சில நிலையங்களில் எரிபொருள் விற்பனை நிறுத்தப்பட்டது. ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.

விலையேற்றம், நாட்டில் வறுமையில் வாடும் மில்லியன் கணக்கானோரைத்தான் அதிகமாகப் பாதிக்கும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

உலகச் சந்தையின் நிலவரத்தைக் கருத்தில்கொண்டு எரிபொருளின் விலையை ஏற்ற முடிவெடுக்கப்பட்டதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சர் நஸ்ரு ஹமிட் தெரிவித்தார்.

ரஷ்ய - உக்ரேன் போரால் உலக அளவில் அதிகரித்துள்ள எரிசக்தி விலைகள் பங்களாதேஷை அதிகம் பாதித்துள்ளது.

அங்கு மின்சார நிலையங்களுக்குப் போதுமான எரிபொருள் இல்லாததால் தினமும் 13 மணி நேரம் வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.