advertise here on top
Join yazhnews Whatsapp Community

குளிரூட்டப்பட்ட லொரியில் எரிபொருள் கடத்தல்!!!

குளிரூட்டப்பட்ட லொறியில் சிலாபத்தில் இருந்து கல்பிட்டிக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட 1429 லீற்றர் பெற்றோல் இன்று (18) அதிகாலை தலுவ பகுதியில் வைத்து நுரைச்சோலை பொலிஸார் மற்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நுரைச்சோலை பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து அமுல்படுத்திய உடனடி வீதித்தடையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 மற்றும் 29 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் சிலாபம் முகுனவடவன மற்றும் ரிதீ வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் சில காலமாக எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபர்கள் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.