
தங்கச் சங்கிலித் திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 27 வயதுடைய சந்தேக நபர் கிரிந்திவெல பொலிஸ் காவலில் வைத்து உயிரிழந்துள்ளார்.
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிள் சந்தேகநபர் தப்பிச் செல்ல முற்பட்டதை அடுத்து கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)