சட்டவிரோதமான முறையில் சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் பிரான்ஸிலிருந்து வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 2 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த நபரின் பயணப் பொதியை சோதனையிட்டபோது, அதில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர், மாலபே பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.