காலி முகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர் தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலி முகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர் தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை!

காலி முகத்திடல் போராட்டத்தில் செயற்பாட்டாளராக செயற்பட்ட தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் இருக்கும் போது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்திய குற்றத்திற்காகவே இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, அவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் (கட்டுப்பாடு, புனர்வாழ்வு) பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் தேசிய தொலைக்காட்சிக்குள் பிரவேசித்து அதன் ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக கடந்த ஜுலை மாதம் 27 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.