இந்தியாவின் சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கூட்டு நினைவு முத்திரைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியாவின் சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு கூட்டு நினைவு முத்திரைகள்!

இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இலங்கை மற்றும் இந்திய தபால் துறைகள் இணைந்து தலா இரண்டு நினைவு முத்திரைகளை வெளியிட முடிவு செய்துள்ளன.

இதற்காக இரு நாடுகளின் தபால் திணைக்களங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

“ஜனநாயகம்” என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் இரு நாட்டு நாடாளுமன்றங்களையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த நினைவு முத்திரைகளை வெளியிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இரு நாடுகளாலும் உருவாக்கப்பட்ட இந்த முத்திரைகளிலிருந்து தலா 3,000 முத்திரைகள், 5,000 நினைவுப் பரிசுத் தாள்கள் மற்றும் தலா 2,000 முதல் நாள் அட்டைகள் பரிமாறிக் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.