அரிசி தட்டுப்பாடு - விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரிசி தட்டுப்பாடு - விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை!

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பால் ஒரு கிலோ அரிசியின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்வதற்கு 1.50 ரூபா மின்சாரம் செலவாகியிருந்த நிலையில், புதிய விலை அதிகரிப்புடன் அது 4 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் திரு.முதித பெரேரா தெரிவித்தார்.

அதன்படி குறைந்தபட்சம் ஒரு கிலோ அரிசி 2.50 ரூபாவினால் அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.

நெல்லின் உத்தரவாத விலை கிலோ ஒன்றுக்கு 120 ரூபாவாகவும், அரிசியின் உத்தரவாத விலை கிலோ ஒன்றுக்கு 220 ரூபா எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பருவத்தில் நெல் விற்பனை செய்வதில் விவசாயிகள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி கையிருப்பு தீர்ந்ததையடுத்து மீண்டும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.