பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளுக்கான புதிய முற்கொடுப்பனவு முறைமையை அறிமுகப்படுத்திய அமைச்சர் பந்துல குணவர்தன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளுக்கான புதிய முற்கொடுப்பனவு முறைமையை அறிமுகப்படுத்திய அமைச்சர் பந்துல குணவர்தன!

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகளுக்கான புதிய முற்கொடுப்பனவு அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி வரை பயணிக்கும் பேருந்துகளுக்காக கொட்டாவ - மகும்புர பல்வகை மையத்தில் முதன்முதலில் முன்பணம் செலுத்தப்பட்ட பேருந்து அட்டை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் பயணத்திற்குத் தேவையான தொகையை முன்கூட்டியே செலுத்தி டெபிட் கார்டுக்கு இணையான பஸ் கார்டைப் பயன்படுத்த முடியும்.

பேருந்து அட்டை தற்போது மக்கள் வங்கியில் பாதுகாப்பான கட்டண நுழைவாயிலின் கீழ் மட்டுமே கிடைக்கிறது.

நாட்டில் பொதுப் போக்குவரத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக எதிர்வரும் காலங்களில் பஸ் அட்டை முறையை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

புகையிரத சேவைகளுக்கும் இதேபோன்ற அட்டை முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.